காணாமல் போன இரு பள்ளிச் சிறுவர்கள் மீட்பு

சூலூர் அருகே காணாமல் போன இரு பள்ளிச் சிறுவர்களை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர்.

சூலூர் அருகே காணாமல் போன இரு பள்ளிச் சிறுவர்களை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர்.
சூலூர் விமானப் படை தளத்தில் விமானப் படை வீரர்களாக பணியாற்றி வருபவர்களின் மகன்களான வருண் சிங் ரத்தோர், கீத்லு பல்தேவ் தத்தானியா ஆகியோர் அருகில் உள்ள விமானப் படை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற இருவரும் காணாமல் போனது தெரியவந்தது.
அது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிறுவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், வருண் சிங் ரத்தோர் சனிக்கிழமை வீடு திரும்பினார்.
மேலும், அன்னூர் அருகே ஒரு வீட்டின் திண்ணையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கீத்லு பல்தேவ் தத்தானியாவை போலீஸார் சனிக்கிழமை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், காணாமல் போன இருவரும் சூலூரில் இருந்து சைக்கிளில் சத்தியமங்கலம் வழியாக மைசூரு சென்றுள்ளனர். பின்னர் ஒரு மாணவன் மட்டும் சனிக்கிழமை வீடு திரும்பியுள்ளார். மற்றொரு மாணவர் வீட்டிற்கு வர மனமின்றி அன்னூர் சென்றது தெரியவந்தது. 
இரு மாணவர்களும் செல்லிடப்பேசியில் ஆன்லைனில் விளையாடும் பப்ஜி என்ற விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com