கோவை ரத்தினம் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கோவை, ஈச்சனாரி அருகில் உள்ள ரத்தினம் கல்வி குழுமத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு கல்லூரியில் உள்ள சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் கே.மணி கலந்து கொண்டார். ரத்தினம் கல்வி குழுமத் தலைவர் மதன் ஏ.செந்தில் தலைமை வகித்தார். விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.