எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை  அருகே எஸ்டேட் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த 2 குடியிருப்புகளை சேதப்படுத்தின. 

வால்பாறை  அருகே எஸ்டேட் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த 2 குடியிருப்புகளை சேதப்படுத்தின. 
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீபகாலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு கூட்டமாக வரும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. 
இந்நிலையில்,  வால்பாறையை அடுத்த தனியார் காபி எஸ்டேட் பகுதிக்கு திங்கள்கிழமை இரவு வந்த யானைகள், அங்கிருந்த இரண்டு குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தின. இதேபோல அய்யர்பாடி எஸ்டேட்டில் உள்ள ரேஷன் கடை, சத்துணவு மையம் கட்டடம் ஆகியவற்றை யானைகள் இடித்து சேதப்படுத்தியதோடு உள்ளே இருந்த பொருள்களையும் சேதப்படுத்தின. வனத் துறையினர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com