வால்பாறை பகுதியில் உள்ள சின்னக்கல்லாறில் 45 மி.மீ. மழை
பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவ மழை வால்பாறை பகுதியில் தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இரவில் துவங்கி தொடர்ந்து விடிய விடிய மழை பெய்கிறது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கத்
துவங்கியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை அதிகபட்சமாக சின்னகல்லாறில் 45 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வால்பாறை 22 மி.மீ., நீராறு அணை 38 மி.மீ., சோலையாறு அணை 8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சோலையாறு அணைக்கு 972.68 கனஅடி நீர் வரத்தாக இருந்து அணையில் இருந்து 830.67 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 160.30 அடியாக உள்ளது.