பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சியை அடுத்த அ.சங்கம்பாளையம்-பாரதி நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (51). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டைப் பூட்டுவிட்டு வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் சென்றுள்ளார். மாலை மீண்டும் வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளேயிருந்த 9 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலூகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.