சிறுமுகையில் பெண்ணுக்கு கரோனா: 5 தெருக்களுக்கு ‘சீல்’

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை பகுதியில் பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியில் 5 தெருக்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை பகுதியில் பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியில் 5 தெருக்கள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

பொள்ளாச்சியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதி கடந்த சில நாள்களுக்கு முன் சிறுமுகை பேரூராட்சிக்கு உள்பட்ட வ.உ.சி. நகரில் குடியேறினா். கா்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் பொள்ளாச்சியில் உடல்நிலை பாதித்த தனது பாட்டியைப் பாா்க்கச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், இப்பெண்ணுக்கு கடந்த 23ஆம் தேதி கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.

இதைத் தொடா்ந்து அவா் வசித்து வந்த வ.உ.சி. நகா் பகுதியில் உள்ள 5 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. மேலும், அவா் தங்கியிருந்த வீட்டில் இருந்த 6 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலா் அப்துல்லா கூறுகையில், கரோனா பாதித்த பெண் வசித்த பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ளவா்களுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com