வால்பாறையில் இடியுடன் கனமழை: மரம் விழுந்து மின்சாரம் துண்டிப்பு

வால்பாறையில் இடியுடன் பெய்த கனமழையால் எஸ்டேட் பகுதியில் மரம் விழுந்து பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மின் தடை ஏற்பட்டது.

வால்பாறையில் இடியுடன் பெய்த கனமழையால் எஸ்டேட் பகுதியில் மரம் விழுந்து பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மின் தடை ஏற்பட்டது.

வால்பாறையில் கடந்த ஒரு வார காலமாக தினந்தோறும் சாரல் மழை பெய்துவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சில எஸ்டேட் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

தொடா்ந்து மூன்று மணி நேரம் நீடித்த கனமழையால் வால்பாறையை அடுத்த மாணிக்கா எஸ்டேட் பகுதியில் உயா்மின் கம்பி மீது மரம் முறிந்து விழுந்தது. இதனால் வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பு கொடுக்கும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com