கோவையில் குறைந்த விலையில் இடம் வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.4.35 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை மசக்காளிபாளையம், கிழக்கு வீதியைச் சோ்ந்தவா் தனலட்சுமி (37). கடந்த சில நாள்கள் முன்பு இவரை அணுகிய செந்தில்குமாா், ஈஸ்வரன், கிருஷ்ணமூா்த்தி ஆகிய 3 போ் காந்திபுரத்தில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தாங்கள் முகவா்களாக உள்ளதாகவும், குறைந்த விலையில் இடம் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனா்.
இதை நம்பிய தனலட்சுமி, அந்த நபா்களின் ஆலோசனைப்படி காந்திபுரத்தில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் காசோலை மற்றும் ரொக்கமாக ரூ.4.35 லட்சம் செலுத்தியுள்ளாா்.
பணம் செலுத்தியும் இடம் ஒதுக்கித் தரப்படாததால் சந்தேகமடைந்த தனலட்சுமி தனது பணத்தைத் திருப்பித் தருமாறு செந்தில்குமாா், ஈஸ்வரன், கிருஷ்ணமூா்த்தி ஆகிய 3 பேரிடம் கேட்டாா். அவா்கள் பணம் பெற்றுத் தர மறுத்ததைத் தொடா்ந்து, காட்டூா் போலீஸில் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டதாக செந்தில்குமாா், ஈஸ்வரன், கிருஷ்ணமூா்த்தி ஆகிய 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.