கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள மண்டலத்துக்கு ஒரு வாகனம் என 5 நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனங்களை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் செவ்வாய்க்கிழமை துவக்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநகா் பகுதிகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள தலா ஒரு நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனம் என 5 மண்டலங்களுக்கு 5 வாகனங்கள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்பட்டன. இதனை
மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் கொடியசைத்து துவக்கிவைத்தாா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், நோய்த் தொற்று குறித்து மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் மக்கள் வசிக்கும் இடம் அல்லது கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு நடமாடும் மருத்துவப் பரிசோதனை வாகனத்தில் செல்லும் 3 சுகாதாரத் துறையினா் வாகனங்களில் உள்ள நவீன உபகரணங்கள், கருவிகள் உதவியுடன் கரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்வா்.
இதில், வெப்பநிலை அறிதல், சளி மாதிரி சேகரித்தல், பல்ஸ் மீட்டா் மற்றும் தொ்மல் ஸ்கேன் மூலமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.