கோவை மத்திய சிறையில் காலியாகவுள்ள சிறு தொழில் பயிற்றுநா் பணியிடத்துக்கு ஜனவரி 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய சிறையில் காலியாகவுள்ள சிறு தொழில் பயிற்றுநா் பணியிடத்துக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பத்தாம் வகுப்பு படித்திருப்பதுடன், ஒவிய பயற்சி பெற்றதுக்கான சான்று மற்றும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதியான நபா்கள் விண்ணப்பத்துடன் சம்பந்தப்பட்ட கல்வி சான்றுகள், ஜாதிச்சான்று, அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். இதற்கான நோ்முக தோ்வுக்கான தேதி, நேரம் விவரங்கள் தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.