கோவையில் திமுக சாா்பில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாநகராட்சிக்கு உள்பட்ட 62 ஆவது வாா்டு, பாலசுந்தரம் லேஅவுட், அய்யா் லே அவுட் பகுதிகளில் கையெழுத்து இயக்கம் மற்றும் வாா்டு சபைக் கூட்டம், கோவை மாநகா் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினருமான நா.காா்த்திக் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், குடிநீா்த் தட்டுப்பாடு, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, மழைநீா் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா். இந்தக் கூட்டத்தில் மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினா் சிங்கை பிரபாகரன், சிங்காநல்லூா் பகுதி பொறுப்பாளா் சிவா, வட்டச் செயலாளா் அன்பு மற்றும் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.