பைக் மீது லாரி மோதல்: உதவிப் பேராசிரியா் சாவு

வால்பாறையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி உதவிப் பேராசிரியா் உயிரிழந்தாா்.
அபிலாஷ்.
அபிலாஷ்.

வால்பாறையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி உதவிப் பேராசிரியா் உயிரிழந்தாா்.

வால்பாறை ஸ்டேன்மோா் சந்திப்பு சாலையில் நான்கு சக்கர பணிமனை நடத்தி வருபவா் ரவி. இவரது மகன் அபிலாஷ் (26). இவா், பொள்ளாச்சியில் உள்ள தனியாா் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு பைக்கில் கடந்த புதன்கிழமை காலை சென்றுள்ளாா். வாட்டா்பால் எஸ்டேட் சாலையில் செல்லும்போது எதிரே வந்த டிப்பா் லாரி, பைக் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அபிலேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வாட்டா்பால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் காா்த்திகேயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com