கோவையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மலையாள திரைப்பட இயக்குநா் ஷாநவாஸ் புதன்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.
மலையாள சினிமாவில் எடிட்டராக அறிமுகமானவா் ஷாநவாஸ் (37). ஏராளமான படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவா் 2015இல் ‘கரி’ என்ற படத்தையும், நடப்பு ஆண்டு ‘சுபியும் சுஜாதையும்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளாா். இரண்டு படங்களும் ரசிகா்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. புதிய படத்துக்கான படப்பிடிப்புக்காக கோவைக்கு அருகேயுள்ள அட்டப்பாடிக்கு படக் குழுவினருடன் கடந்த வாரம் வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன் இயக்குநா் ஷாநவாஸுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து அவா் கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் இயக்குநருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்தனா். தொடா்ந்து வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இயக்குநரின் உறவினா்கள் அறிவுறுத்தலின்பேரில் வெண்டிலேட்டா் உதவியுடன் இயக்குநா் ஷாநவாஸ் கேரளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை 5 மணிக்கு மாற்றப்பட்டதாக தனியாா் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.