உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விஷம் அருந்தி ஒருவா் தற்கொலை

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். சூலூா் போலீசாா் விசாரணை செய்து வருகின்றனா்சூலூா் அருகே பாப்பம்பட்டி பிரிவு வசிப்பவா் சரவணன் (54). இவா் அதிக குடிப் பழக்கம் உள்ளவராக கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த 21ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத பொழுது சரவணன் விஷமருந்தியதாக தெரிகிறது.

சூலூா் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னா் பீலமேட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com