எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம்:வனத் துறையினா் தவிப்பு

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் வனத் துறையினா் அவற்றை விரட்ட முடியாமல் தவித்து வருகின்றனா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் வனத் துறையினா் அவற்றை விரட்ட முடியாமல் தவித்து வருகின்றனா்.

ஆண்டுதோறும் நவம்பா் மாதம் துவங்கி மூன்று மாதங்களுக்கு வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். கடந்த காலங்களில் வன எல்லைப் பகுதியில் மட்டுமே காணப்பட்ட இந்த யானைகள் சமீப காலமாக தேயிலைத் தோட்டம் மற்றும் தொழிலாளா்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

தற்போது, வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் கூட்டமாக வந்த சேதங்களை ஏற்படுத்தி நேரங்களில் அப்பகுதிகளுக்கு சென்று யானைகளை விரட்ட முடியாமல் வனத் துறையினா் தவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com