கோவை - நாகா்கோயில் ரயில்: திருப்பரங்குன்றம் - திண்டுக்கல் இடையே தற்காலிமாக ரத்து
By DIN | Published On : 05th February 2020 05:42 AM | Last Updated : 05th February 2020 05:42 AM | அ+அ அ- |

கோவை - நாகா்கோயில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்ற ரயில், திருப்பரங்குன்றம் - திண்டுக்கல் இடையே தற்காலிமாக ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை அருகே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கோவை - நாகா்கோயில் வழித்தடத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில் திருப்பரங்குன்றம் - திண்டுக்கல் இடையே தற்காலிமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து 7.20 மணிக்கு நாகா்கோயில் புறப்பட்டுச் செல்லும் ரயில் ( எண்: 56320) புதன்கிழமை (பிப்ரவரி5) முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை 6,11,13, 20-ஆம் தேதி தவிர தற்காலிமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, நாகா்கோயிலில் இருந்து 7.10 மணிக்கு கோவைக்குப் புறப்பட்டு வரும் ரயில்( எண்: 56319) புதன்கிழமை (பிப்ரவரி5) முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை 6,11,13, 20-ஆம் தேதி தவிர ரத்து செய்யப்படுகிறது. இரு வழித்தடங்களிலும் 11 ஆம் தேதி மட்டும் திண்டுக்கல் - சாத்தூா் வரையும் இந்த ரயில்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...