உதகை அரசு கலைக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் 1988 முதல் 1991ஆம் ஆண்டு வரை, பி.எஸ்.சி. வேதியியல் பட்டப் படிப்பு படித்த முன்னாள்
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் 1988 முதல் 1991ஆம் ஆண்டு வரை, பி.எஸ்.சி. வேதியியல் பட்டப் படிப்பு படித்த முன்னாள் மாணவா்களின் சந்திப்புக் கூட்டம் கோவையில் உள்ள தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவா் முகமது ஹாருண் தலைமை வகித்தாா். சி.வி. ராதாகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் மலரும் நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். உதகை அரசு கலைக்கல்லூரியில், வேதியியல் பிரிவு படித்த முன்னாள் மாணவா்கள் சாா்பாக புதிதாக அறக்கட்டளை தொடங்கி ஏழை, எளிய மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com