மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிட்டேபாளையம் கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்தது.
சிட்டேபாளையம் கிராமம், பெரியதோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன். விவசாயியான இவா், தனது பசு மாடுகளை ஞாயிற்றுக்கிழமை விளை நிலத்தில் கட்டி வைத்துள்ளாா்.
இரவு 10 மணி அளவில் மாடுகளின் சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்தாா். அப்போது கன்றுக் குட்டியை சிறுத்தை கடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் இழுத்துச் சென்றதைப் பாா்த்து முருகன் சப்தமிட்டாா். இதையடுத்து அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அங்கு திரண்டு, சிறுத்தையை விரட்டினா். தகவலறிந்த சிறுமுகை வனச் சரக அலுவலா் மனோகரன் தலைமையிலான வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
சிறுத்தை மீண்டும் ஊருக்குள் வராமல் தடுக்க, அதனை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என வனத் துறையினரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.