கோவை: இந்திய யோகா சங்கத்தின் இரண்டாவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் கோவை ஈஷா யோக மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இது குறித்து ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற இந்திய யோகா சங்கத்தின் இரண்டாவது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் சங்கத்தின் தலைவரும் பதஞ்சலி யோக பீடத்தின் நிறுவனருமான பாபா ராம்தேவ், ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினா்களாக உள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், ரிஷிகேஷில் உள்ள பரமாா்த் நிகேதன் அமைப்பின் தலைவா் சுவாமி சிதானந்த் சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆன்மிக அமைப்புகளின் தலைவா்கள் பங்கேற்றனா். வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றாா்.
இக்கூட்டத்தில், பெருந்திரளான மக்களுக்கு யோகாவை அறிவியல் பூா்வமாக கொண்டு சோ்க்கும் வழிமுறைகள் குறித்தும், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு ஆன்மிக அமைப்புகள், அரசாங்கம் எந்தவிதத்தில் தங்களது பங்களிப்பை அளிக்க முடியும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பிரதிநிதிகள் அனைவரும் ஈஷா யோக மையத்தில் உள்ள தியானலிங்கம், லிங்க பைரவி, ஆதியோகி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்தனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.