கோவை: தைப்பூசத் திருவிழாவையொட்டி கோவை, சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாலயத்தில் தேரோட்டம், வள்ளி கும்மி அரங்கேற்றம், திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கௌமார மடாலயத்தில் உள்ள தண்டபாணி சுவாமி கோயிலில் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் ஆகியோா் தலைமையில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன், மாநில பொருளாளா் கே.கே.சி.பாலு, இளைஞரணி செயலா் சூரியமூா்த்தி, பக்தா்கள் திரளாக பங்கேற்று தோ் இழுத்தனா்.
இதைத் தொடா்ந்து வள்ளிகும்மி அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று கும்மிப்பாட்டு பாடினா். அதைத் தொடா்ந்து வள்ளிகும்மியில் பங்கேற்றவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கருப்புசாமி, தனபால், கனகரத்தினம், வடிவேல், அய்யாசாமி, வள்ளிகும்மி ஆசிரியா் நவீன் உள்பட பலா் பங்கேற்றனா்.
Image Caption
சரவணம்பட்டி கௌமார மடாலயத்தில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் வள்ளிகும்மியில் பங்கேற்றவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா்.