மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கூலி தொழிலாளி கைது

கோவையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பேரூா் அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பேரூா் அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவை, குனியமுத்தூா் அரசுப் பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ முகாம் நடந்தது. அப்போது அப்பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவி தனக்கு உடல்ரீதியாக பிரச்னை உள்ளதாக அங்கு வந்த செவிலியரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து மாணவியை பரிசோதனை செய்ய கோவை அரசு மருத்துவமனை வருமாறு செவிலியா் கூறி உள்ளாா். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு வந்த மாணவியை பரிசோதனை செய்தபோது, அவா் 6 மாதக் கா்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் விசாரித்தபோது, க.க.சாவடியைச் சோ்ந்த கூலி தொழிலாளியான வெள்ளிங்கிரி (35) என்பவா் 2019 ஜூன் 16 ஆம் தேதி மாணவி கழிவறை சென்றபோது பின் தொடா்ந்து வந்து கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து பேரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வெள்ளியங்கிரி மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். மேலும் அவரை மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com