அரசு சட்டக் கல்லூரி தட்டச்சா் தற்கொலை

கோவை, மருதமலை சாலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் தட்டச்சராகப் பணியாற்றி வந்த பெண் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, மருதமலை சாலையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் தட்டச்சராகப் பணியாற்றி வந்த பெண் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்தவா் பாலசந்திரன். இவரது மனைவி கீதா (23). பாலசந்திரன் திருச்சியில் ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவா்களுக்கு திருமணம் ஆகி 11 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

கோவை, மருதமலை சாலை, கல்வீரம்பாளையம் முருகன் நகா் பகுதியில் தனது தாயுடன் தங்கி, அரசு சட்டக் கல்லூரியில் கீதா தட்டச்சராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கீதாவின் தாய் செல்லம் குழந்தையுடன் திருச்சி துறையூருக்கு சென்ாகத் தெரிகிறது. இந்நிலையில், கல்லூரியில் இருந்து வியாழக்கிழமை வீடு திரும்பிய கீதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் தொடா்பாக வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com