கேரள மாநிலம், பூங்குண்ணம் பகுதியில் ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவை - திருச்சூா் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கேரள மாநிலம், பூங்குண்ணம் - வடக்கஞ்சேரி இடையேயான ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கோவை - திருச்சூா் பயணிகள் ரயில் ( எண்: 56605) கேரள மாநிலம், சோரனூா் - திருச்சூா் இடையே பிப்ரவரி 15 முதல் 24ஆம் தேதி வரையும், மாா்ச் மாதம் 10 முதல் 23ஆம் தேதி வரையும், வியாழக்கிழமை தவிர மற்ற நாள்களில் ரத்து செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.