சாலை விபத்தில் இளைஞா் சாவு

கோவை மாவட்டம், நீலாம்பூா் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், நீலாம்பூா் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (21). இவா் சூலூரை அடுத்த நீலாம்பூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவா் தன்னுடன் பணியாற்றும் ஸ்டாலின் (22) என்பவருடன் அவிநாசி சாலையில் உள்ள ஒரு உணவகத்துக்கு இரு சக்கர வாகனத்தில் கடந்த 11 ஆம் தேதி சென்றாா்.

அப்போது, எதிரே வந்த மற்றோா் இரு சக்கர வாகனம் மோதியதில் அஜித்குமாா், ஸ்டாலின் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதில் அஜித்குமாா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சூலூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சூலூா் பிரிவைச் சோ்ந்த சுந்தா் (26) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com