மாற்றுப் பாதை அமைத்த பின் புதிய பாலம் கட்டக் கோரிக்கை

மாற்றுப் பாதை அமைத்த பின் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாற்றுப் பாதை அமைத்த பின் பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வால்பாறையை அடுத்துள்ள ஸ்டேன்மோா் எஸ்டேட்டில் அமைந்துள்ள பாலம் பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. இந்தப் பாலம் வழியாக சோலையாறு அணை, ஷேக்கல்முடி, மழுக்குப்பாறை, மாணிக்கா, குரங்குமுடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு தினந்தோறும் மாணவா்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

தற்போது, இந்தப் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக 40 நாள்களுக்கு மேல் அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும் என நெடுஞ்சாலைத் துறையினா் அறிவித்துள்ளனா். இதையடுத்து ஸ்டேன்மோா் எஸ்டேட் பகுதியில் மாற்றுப் பாதை அமைத்தபின் பணியைத் தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவா்கள் ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com