வரி செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

வரி செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என வால்பாறை நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

வரி செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என வால்பாறை நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

வால்பாறை நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீா்க் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட வரிகளை பலா் இதுவரை செலுத்தாமல் உள்ளனா். இதில் சிலா் பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் தொடா்ந்து காலதாமதம் செய்து வருகின்றனா்.

எனவே, நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய தொகையை உடனடியாக நகராட்சி வளாகத்தில் உள்ள கணினி வசூல் மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் கட்டடங்களுக்கு சீல் மற்றும் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com