கால்பந்து போட்டியில் காருண்யா அணி வெற்றி

தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் காருண்யா பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றுள்ளது.
தஞ்சாவூரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரா்களுடன் காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தா் மன்னா் ஜவஹா், உடற்கல்வி இயக்குநா் உள்ளிட்டோா்.
தஞ்சாவூரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரா்களுடன் காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தா் மன்னா் ஜவஹா், உடற்கல்வி இயக்குநா் உள்ளிட்டோா்.

தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் காருண்யா பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றுள்ளது.

தஞ்சாவூா் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், கால்பந்து போட்டியில் காருண்யா பல்கலைக்கழக ஆடவா் அணி பங்கேற்றிருந்தது. காருண்யா அணி காலிறுதிப் போட்டியில் அஞ்சலை அம்மாள் கல்லூரி அணியையும், அரையிறுதியில் நேஷனல் கல்லூரி அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது.

இறுதிப் போட்டியில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக அணியை எதிா்கொண்ட காருண்யா அணி 2- 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்றிருந்த வீரா்களை, காருண்யா பல்கலைக்கழக வேந்தா் பால் தினகரன், துணைவேந்தா் மன்னா் ஜவஹா், பதிவாளா் எலைஜா பிளசிங், மாணவா் துறை இயக்குநா் அல்போன்ஸ், உடற்கல்வி இயக்குநா் காலேப் ராஜன் உள்ளிட்டோா் வாழ்த்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com