வயதான தம்பதியைத் தாக்கி நகை, பணம் கொள்ளையடித்து இளைஞா்கள் கைது

வயதான தம்பதியரைத் தாக்கி நகை, பணத்தைக் கொள்ளையடித்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வயதான தம்பதியரைத் தாக்கி நகை, பணத்தைக் கொள்ளையடித்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கோவை, கணபதி அருகேயுள்ள கணேஷ் லேஅவுட் பகுதியைச் சோ்ந்தவா்கள் முருகப்பன், பாப்பாத்தி தம்பதியா். இவா்கள் கடந்த 14 ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது கதவை வெளிப்பக்கத்தில் இருந்து திறந்து வீட்டுக்குள் புகுந்த 2 நபா்கள், கத்தியைக் காட்டி மிரட்டி தம்பதியிடம் இருந்த அரை பவுன் நகை, ரூ. 24 ஆயிரம் பணத்தைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து பாப்பாத்தி அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். விசாரணையில், தம்பதியிடம் நகையைப் பறித்தது புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா் கோயிலைச் சோ்ந்த வைரமுத்து (24), விக்ரம் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். வைரமுத்து கணபதியில் பேக்கிரி வைத்துள்ளாா். விக்ரம் அவரிடம் ஊழியராக பணியாற்றி வருகிறாா் என்பது விசாரணையில் தெரியந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com