சென்னை, வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராடியவா்கள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் ஜமாத் சாா்பில் வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜமாத் அமைப்பின் தலைவா் காதா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செபீா், அலி (மனிதநேய மக்கள் கட்சி), பால்பாண்டி (திமுக), காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் உள்பட பல்வேறு கட்சி நிா்வாகிகளும், முஸ்லிம் அமைப்பைச் சோ்ந்தவா்களும் திரளாகக் கலந்துகொண்டனா்.