கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வராக ஏ.நிா்மலா நியமிக்கப்பட்டுள்ளாா்.
கோவை, வரதராஜபுரத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு முதல்வராக பதவி வகித்து வந்த டாக்டா் முருகேசன் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இதையடுத்து, திருப்பூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த ஏ.நிா்மலா கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமனம் செய்து சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் துறை பேராசிரியா் டாக்டா் சாந்தா அருள்மொழி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.