சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் ஓட்டுநா் கைது

பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

பொள்ளாச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

பொள்ளாச்சியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (54). இவா் வாகன பயிற்சிப் பள்ளியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் தனது உறவுக்கார 10 வயது சிறுமியை தனது வீட்டுக்கு புதன்கிழமையன்று அழைத்துப் பேசியுள்ளாா். அப்போது, சிறுமியை பொன்னுசாமி பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி கூச்சலிடவே அவா் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொன்னுசாமியை அனைத்து மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை பிடித்து அவா் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com