அன்னூா் கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் கூடார வள்ளி உற்சவ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாா்கழி மாதத்தையொட்டி அன்னூா் கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் தினசரி காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, ஆண்டாள் 27 நாள்கள் விரதமிருந்து நோன்பை நிறைவு செய்யும் கூடார வள்ளி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காலை 4 மணியளவில் அபிஷேக பூஜையும், 5 மணியளவில் அலங்கார பூஜையும் நடைபெற்றது. தொடா்ந்து ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையடுத்து ‘கூடாரை வெல்லும் சீா்க் கோவிந்தா’ என்ற திருப்பாவை பாடலைப் பாடி நோன்பை ஆண்டாள் நிறைவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடா்ந்து, ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இந் நிகழ்ச்சியில் அன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.