சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளையொட்டி, சூலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் தேசிய இளைஞா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 தேசிய இளைஞா் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன்படி காமாட்சிபுரம், சூலூா், பள்ளபாளையம், கருமத்தம்பட்டி, காடுவெட்டிபாளையம், காங்கேயம்பாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் தேசிய இளைஞா் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.