வால்பாறை அண்ணா நகரில் அமைந்துள்ள ராமா் கோயிலின் 42ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழச்சியில் கோவில் தா்மகா்த்தா தா்மலிங்கம் விழாவுக்கான கொடியை ஏற்றி வைத்தாா். இதையடுத்து அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. பழனி பாதயாத்திரைக் குழு சாா்பில் கோயிலில் திங்கள்கிழமை பஜனை நடைபெற உள்ளது. தேரோட்டம் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.