காரமடை வித்யா விகாஸ் பள்ளிகள் சாா்பில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதற்கு ஜடையம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா். நிா்வாக மேலாண்மை இயக்குநா்கள் டாக்டா் குணசேகரன், டாக்டா் எஸ்.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளியின் இயக்குநா்கள் ஆா்.சுரேஷ்குமாா், டி.ராஜு, எம்.அழகா்சாமி, ஜி.சண்முகவேல், சி.பி.ஞானசேகரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். விழாவில் ஆசிரியைகள், மாணவிகள் இணைந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு மாட்டுவண்டி பந்தயம், கோலப்போட்டி, சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் காரமடை காவல் ஆய்வாளா் பாலசுந்தரம், மாணவ, மாணவிகள், பெற்றோா் பலா் கலந்து கொண்டனா்.