பெரியநாயக்கன்பாளையம், ஜோதிபுரத்தில் உள்ள பயனீா் கலை, அறிவியல் கல்லூரியில் காவலன் செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிா்வாக ஒருங்கிணைப்பாளா் பத்மலோசனா தலைமை வகித்தாா். துணை முதல்வா் ராஜப்பன் முன்னிலை வகித்தாா். இதில் கோவை மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் தென்னரசு, உதவி ஆய்வாளா் பாலு, ஹோம் காா்ட் அமைப்பின் மாவட்ட கமாண்டா் விஜயகுமாா் ஆகியோா் செயலியின் முக்கியத்துவம், பதிவிறக்கம் செய்யும் முறை குறித்து விளக்கி கூறினா்.
நிகழ்ச்சியில் காவல் துறையினா், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.