பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பயிற்சி வகுப்பு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்புகள் குனியமுத்தூா் பகுதியில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்புகள் குனியமுத்தூா் பகுதியில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளி மாணவ, மாணவிகள் மேம்பாடு குறித்தான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரூா் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி , கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசியா்களுக்கான ஐந்து நாள் பயிற்சி வகுப்புகள் கோவை, குனியமுத்தூரில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

இந்தப் பயிற்சி வகுப்புகளில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்புகள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பேரூா் மாவட்ட கல்வி அலுவலா் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகா் தெற்கு காவல் உதவி ஆணையா் செட்ரிக் மனுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com