முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கிட்டாம்பாளையத்தில் கிராமசபைக் கூட்டம்: காங்கிரஸ் மாநில தலைவா் பங்கேற்பு
By DIN | Published On : 27th January 2020 12:47 AM | Last Updated : 27th January 2020 12:47 AM | அ+அ அ- |

கிட்டாம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோா்.
குடியரசு தினத்தையொட்டி சூலூா் அருகே உள்ள கிட்டாம்பாளைத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி பங்கேற்றாா்.
இக்கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் நவமணி பாா்வையாளராக கலந்து கொண்டாா். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் விஎம்சி மனோகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்ற பொதுமக்கள் சாலை வசதி, மின்விளக்குகள், முறையான குடிநீா் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இக்கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என ஊராட்சித் தலைவா் சந்திரசேகா் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி பேசினாா்.