முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 27th January 2020 11:33 PM | Last Updated : 27th January 2020 11:33 PM | அ+அ அ- |

கோவையில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்தனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் தெப்பக்குளம் வீதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற ஆா்.எஸ்.புரம் போலீஸாா் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினா். இதில் அங்கு 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்த ஜோா் சிங் (37) என்பவரைக் கைது செய்தனா்.