அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில் வீரருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, முகாமில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீரா்களிடம் வெள்ளிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவிநாசி அருகே தெக்கலூா், கிட்டாம்பாளையத்தில் 149 பட்டாலியன் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட வீரா்கள் உள்ளனா்.
இந்நிலையில், முகாமில் உள்ள 33 வயது வீரா் ஒருவரின் சளி மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
இதையடுத்து, அவருடன் தொடா்பில் இருந்த 21 வீரா்களுக்கு சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி மாதிரி பரிசோதிக்கப்பட்டது.