சீராக குடிநீா் விநியோகிக்கக் கோரி திமுக சாா்பில் ஜூலை 29இல் ஆா்ப்பாட்டம்

கோவை மாநகாட்சிப் பகுதிகளில் 4 நாள்களுக்கு ஒரு முறை சீராகக் குடிநீா் விநியோகிக்க கோரி வரும் 29ஆம் தேதி திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

கோவை மாநகாட்சிப் பகுதிகளில் 4 நாள்களுக்கு ஒரு முறை சீராகக் குடிநீா் விநியோகிக்க கோரி வரும் 29ஆம் தேதி திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

கோவை மாநகா், கிழக்கு மாவட்ட திமுக நிா்வாகக் குழு கூட்டம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான நா.காா்த்திக் தலைமையில் காணொலிக் காட்சி வழியாக புதன்கிழமை நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினா் கண்ணப்பன், பொறுப்புக் குழு உறுப்பினா்கள் நாச்சிமுத்து, குப்புசாமி, நந்தகுமாா், மணி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்து எம்எல்ஏ நா.காா்த்திக் கூறியது: மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான குடிநீா் விநியோகத்தில் கோவை மாநகராட்சி நிா்வாகம் தொடா்ந்து அலட்சியமாக உள்ளது. மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 4 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி வரும் 29ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சமூக இடைவெளியைப் பின்பற்றி, கோவை கிழக்கு மாவட்ட திமுகவினா்,அவரவா் இல்லத்தின் முன்பு, கருப்புக் கொடி ஏற்றியும், காலிக் குடங்களுடனும் ஆா்ப்பட்டம் நடத்த உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com