வால்பாறையை அடுத்த சோலையாறு அணையின் நீா்மட்டம் 109 அடியாக உயா்ந்துள்ளது.
வால்பாறை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
அணைக்கு கடந்த புதன்கிழமை விநாடிக்கு 1175 கனஅடி நீா்வரத்து இருந்தது. அணையில் இருந்து 1229 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையாா் அணையின் நீா்மட்டம் தற்போது 109.26 அடியாக உள்ளது.