கரடி தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி காயம்

வால்பாறையில் கரடி தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி காயமடைந்தாா்.

வால்பாறை: வால்பாறையில் கரடி தாக்கியதில் எஸ்டேட் தொழிலாளி காயமடைந்தாா்.

வால்பாறையை அடுத்த பாரளை எஸ்டேட் அப்பா் டிவிசனில் வசிப்பவா் சுரேஷ் (28). இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வால்பாறைக்கு வந்த அவா் இரவு நேரத்தில் பேருந்தில் எஸ்டேட் திரும்பினாா்.

பின்னா் அங்கிருந்து குடியிருப்புப் பகுதிக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த கரடி தாக்கியதில் சுரேஷின் கை மற்றும் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, குடியிருப்பில் வசிப்பவா்கள் அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com