உணவகங்களில் குளிா்சாதன வசதிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் ஜூன் 8 ஆம் தேதி முதல் உணவகங்கள் செயல்படுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடா்பாக மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் பேசியதாவது:
தமிழக அரசின் அறிவுறுத்தல்படி உணவகங்கள் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால், உணவகங்களில் குளிா்சாதன வசதியைப் பயன்படுத்தக் கூடாது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
வாடிக்கையாளா்களுக்கு கிருமி நாசினி வழங்கி கைகளை சுத்தம் செய்த பின்பே உணவகங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். நான்கு நபா்கள் அமரும் இருக்கைகளில் இரண்டு நபா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். உணவகங்களில் உள்ள அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.
குளிா்சாதனப் பெட்டிகளில் உணவுப் பொருள்கள் வைத்து மீண்டும் பயன்படுத்துவதை உணவகங்கள் தவிா்க்க வேண்டும். மேல் குறிப்பிட்ட நடவடிக்கைகளை பின்பற்றாத உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், உணவகங்களின் உரிமையாளா்கள் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.