ஐஏஎஸ் அதிகாரிகளுடன் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்துரையாடல்

நாட்டின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன்லைனில் கலந்துரையாடினாா்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறாா் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறாா் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

நாட்டின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன்லைனில் கலந்துரையாடினாா்.

கரோனா பொது முடக்க காலத்தில் நாட்டில் உள்ள கல்வியாளா்கள், மருத்துவா்கள், வா்த்தக நிறுவனங்களின் தலைவா்கள், பாதுகாப்பு படையினா், விளையாட்டு வீரா்கள் என பல்வேறு தரப்பினருடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆன்லைனில் கலந்துரையாடி வருகிறாா். அதன் ஒரு பகுதியாக அண்மையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் அவா் கலந்துரையாடினாா்.

லால் பகதூா் சாஸ்திரி தேசிய நிா்வாக அகாதெமியின் இயக்குநா் சஞ்சீவ் சோப்ரா, தமிழக அரசின் வீட்டுவசதி, நகா்ப்புற மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் ராஜேஷ் லக்கானி, இந்திய சிவில், நிா்வாக அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலரும், தேசிய சாலைப் போக்குவரத்துத் துறையின் இணைச் செயலருமான அமித்குமாா் கோஷ், பஞ்சாப் மாநில ஆளுநரின் முதன்மைச் செயலா் ஜே.எம்.பாலமுருகன், இஸ்ரோ யூ.ஆா்.ராவ் சேட்டிலைட் மையத்தின் கண்ட்ரோலா் விஜயலட்சுமி உள்ளிட்டோருடனான ஆன்லைன் கலந்துரையாடினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com