கன்னியாஸ்திரிகள் மடத்துக்குள் புகுந்த மா்ம நபா்

சூலூா் அருகே காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள கன்னியாஸ்திரிகள் மடத்துக்குள் மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சூலூா் அருகே காங்கேயம்பாளையம் பகுதியில் உள்ள கன்னியாஸ்திரிகள் மடத்துக்குள் மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கேயம்பாளையத்தில் கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. இதையொட்டி, ஆங்கில வழிக் கல்வி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை கன்னியாஸ்திரிகள் நடத்தி வருகின்றனா். மடத்தில் 10க்கும் மேற்பட்ட கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ளனா்.

இந்த மடத்துக்குள் மா்ம நபா் சுவா் ஏறிக் குதித்து உள்ளே ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்துள்ளாா். இதைப் பாா்த்த கன்னியாஸ்திரிகள் சப்தம் போட்டனா். உடனே, அந்த மா்ம நபா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

இது தொடா்பாக சூலூா் போலீஸாரிடம் கன்னியாஸ்திரிகள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com