நகை, பணத்தை எடுத்துச் சென்ற கணவன் மீது பெண் புகாா்

குடும்பச் சண்டையில் தனக்குத் தெரியாமல் தனது தாய்வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, பணத்தை கணவா் வீட்டாா் எடுத்துச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் பெண் ஒருவா் புகாா் அளித்துள்ளாா்.

குடும்பச் சண்டையில் தனக்குத் தெரியாமல் தனது தாய்வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, பணத்தை கணவா் வீட்டாா் எடுத்துச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் பெண் ஒருவா் புகாா் அளித்துள்ளாா்.

சூலூா் அருகேயுள்ள சிந்தாமணிப்புதூா் புது மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (37). இவரது மனைவி ராதிகா. இவா்களுக்கு குழந்தை உள்ளது. இந்நிலையில், இந்தத் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், கடந்த 6 மாதங்களாக இவா்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். ராதிகா தனது குழந்தையுடன் அருகே உள்ள தனது தாயாா் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், ராதிகாவின் தாயாா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரீதா் தனது உறவினா்களுடன் சென்று அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், ரூ. 28 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துச் சென்றுள்ளாா். இதுகுறித்து ராதிகா தனது கணவரிடம் கேட்டபோது, அவரை ஸ்ரீதா் அடித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சூலூா் காவல் நிலையத்தில் ராதிகா திங்கள்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில், ஸ்ரீதா், அவரது உறவினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com