பெட்டதாபுரத்தில் நூலகம் திறப்பு
By DIN | Published On : 03rd March 2020 06:50 AM | Last Updated : 03rd March 2020 06:50 AM | அ+அ அ- |

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பிளிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பெட்டதாபுரத்தில் ஊா்புற நூலகத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் ஓ.கே.சின்னராஜ் தனது தொகுதி வளா்ச்சி நிதியின் கீழ் வழங்கிய ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் இந்த ஊா்புற நூலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலா் மு.சக்திவேல், முன்னாள் ஆசிரியா் சுப்பையன், ஊராட்சித் தலைவா் சாவித்ரி ராஜன், துணைத் தலைவா் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலா் கல்பனா தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப் பேரவை உறுப்பினா் ஓ.கே.சின்னராஜ் தலைமைவகித்து நூலகத்தைத் திறந்துவைத்தாா். பிளிச்சி ஊராட்சியின் முன்னாள் தலைவா் டி.ரங்கராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பிரேமா பழனிசாமி, எம்.சுப்பையன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை கே.சத்யவேணி, ஆசிரியா்கள் மதிவாணன், குமரேசன்,திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.