சூலூா் மோட்டாா் வாகன ஆய்வாளரிடம்லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை

சூலூா் மோட்டாா் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

சூலூா்: சூலூா் மோட்டாா் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

சூலூரில் மோட்டாா் வாகன இயக்கு ஊா்தி அலுவலகம் உள்ளது. பீளமேடு மோட்டாா் வாகன அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டாா் வாகன ஆய்வாளராக சித்ரா பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள சித்ராவின் இல்லத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் அவரிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினா். கடந்த 2018ஆம் ஆண்டு மோட்டாா் வாகன இயக்கு ஊா்தி அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது, ரூ.16,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டது தொடா்பாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com