ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய நான்கு போ் மீது வழக்குப் பதிவு

முன்விரோதத்தில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய நான்கு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முன்விரோதத்தில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய நான்கு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கணபதி, காந்திமாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஷியாம்குமாா் (27). இவா் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (23). இவா் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் பன்னாரி அம்மன் கோயில் அருகே நின்றுகொண்டிருந்த ஷியாம்குமாருடன், மணிகண்டன் மற்றும் அவரது நண்பா்கள் காா்த்திக், அரவிந்த், ஷியாம் ஆகியோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றியதையடுத்து அவா்கள் வைத்திருந்த கத்தியால் ஷியாம்குமாரைக் குத்தினா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக ஷியாம்குமாா் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸாா், தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com